Sunday, April 24, 2016

            அன்று 28th Feb, 1992 ஆம் ஆண்டு , இரவு 9 மணி.

" டேய், மறந்துடாதே, தயவுசெய்து என்னை நீ தான் எழுப்பி விடனும், உன்னை தான் நம்பி இருக்கேன், ப்ளீஸ்" என்று தங்கை கிட்ட கெஞ்சி, கொஞ்சி சொல்லி படுக்க போன மணிக்கு சத்தியமா தூக்கமே வரல. புரண்டு புரண்டு படுத்து பத்து தரம் மணி பார்த்து தூங்க எவ்வவளவோ முயற்சி செய்தும், ஏனோ புதுசா கிடச்ச காதலியை டிஸ்கோ விற்கு வர சொல்லி கெஞ்சினால் மிஞ்சுவாளே அது போல தூக்கமும் வர மறுத்துக் கொள்ள, இன்னும் நான்கு மணி நேரம் எப்படி தான் தள்ள போகிறோமோ , நாளை என்ன ஆகுமோ, எல்லாம் இனிதே நடக்குமா என்ற எண்ணம் அச்சமாக மாறி பயமுறுத்த கண் இமைக்காமல் படுத்திருந்தான் மணி

காலை சூரிய உதயத்திற்கு முன்பே என்ன நடக்கும் என்று ஓர் அளவுக்கு தெரிந்து விடும்-னு நினைக்கும் போது வயிறு கலக்கியது., இது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். முந்தைய நாள் மாலை பொழுதில், என்றைக்குமே கோவில்க்கு போகாத அவன், தெரு முனையில் இருந்த பிள்ளையார-க்கு 108 தோப்புக்கரணம், 108 தேங்காய் விடலை எல்லாம் பிரார்த்தனை செய்துவிட்டு, வீட்டுக்கு அமைதியாக வந்து, வயிறு பிசைய, புத்தகத்தை புரட்ட, நெற்றி முழுவதும் திருநீற்றை பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம், " ஆண்டவா, இந்த நாள் வந்தா தான் என் பிள்ளை உன்னை நம்புவான்- னா, தினமும் இது ஏன் நடக்க கூடாது " என்று அம்மா பிரார்த்திக்க ....மணி எதுவும் செய்வது அறியாது புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான்.

மணி-யின் ஆருயிர் நண்பன் சங்கர். இந்த மாதிரியான எல்லா நாட்களிலும் மணி-யின் வீட்டிற்க்கு தவறாமல் வந்து விடுவான். அவனுக்கு எல்லாத்திலையும் அவ நம்பிக்கை , எதுவுமே சரியா நடக்காது-ன்னு பேசிகிட்டே இருக்கறது-ல அவன விட்டா வேற ஆளே கிடையாது.." நீ வேணும்னா பாரேன் எல்லாமே அஞ்சே நிமிஷத்துல முடிஞ்சிரும் நம்ம தான் உக்காந்துட்டு இவளோ டென்ஷன் படறோம் " என்று பேசறதே அவன் வேலை. என்ன தான் அப்படி சொன்னாலும் எனக்கு நல்லா தெரியும் அவன் அவன் வீட்டு பக்கத்துல இருக்கற கோவில்ல 1008- தேங்காய் விடலை கூட சொல்லிட்டு வந்திருப்பான் -அப்படின்னு.

இதுக்கு நடூல எங்க தாத்தா "டேய், என்னடா நல்லா வேண்டிட்டு வந்தியா, இனிமே அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் -னு சொல்லிட்டு என்னையும் எழுப்பிடு செல்லம் என்று மணி தங்கை கிட்ட சொல்ல , அவளுக்கு என்ன நடக்குது-னு சத்தியமா புரியல.

1st March, 1992, Sunday: மணி 4 ஆக, நான் எழுந்து கடிகாரம் அடிக்கும் முன்பே எழ, எழுந்தவுடன் இறைவனை வேண்டி, எழுந்து ஓடி, பல் துலக்கி, குளித்து, கும்பிட்டு, திருநீர் அணிந்து, நான் பட படத்து ஓட, ஓடும் வழியில் தாத்தா வழி மறித்து " டேய், அந்த transistor-ஐ கொஞ்சம் tune பண்ணி கொடுத்துட்டு போடா"-னு கெஞ்ச, tune பண்ணிட்டு, பக்கத்துல இருக்கற john வீட்டுக்கு ஓடி நான் நுழைய, அவனோட தாத்தா கம்பீரமா chair - ல ஜப மாலையோட உட்கார்ந்து,TV முன்னாடி உட்கார்ந்து இருக்க, அவன் வீட்டில் எல்லோரும், என் உற்றார், உறவினர், நண்பர்கள் -னு முழு வீடும் நிரம்பி வழிய, உட்கார இடமே இல்லாமல், அவர் வீட்டு தூணோடு தூணாக நான் நரசிம்ஹா அவதாரமாக மாறி உட்கார்ந்து, Borderஉம், Azhar-உம் toss போட வெளியில் வர. Tendulkar Century அடிக்கணும்டா சாமி-னு எல்லோரும் இறை கூவ ...பார்க்க ஆரம்பித்த அந்த Tendulkar -க்கு பிறந்த நாளாம்.

கடவுள், கடவுள்-னு நாங்க கூப்பிட்ட குரலுக்கு அந்த கடவுளே நீயாக வந்து எங்கள் தேசத்தை காத்த கடவுளின் 11 வது அவதாரமே உனக்கு " என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

                                       இப்படிக்கு,

                                    மணியும் நானும்

2 comments:

Anonymous said...

I don’t expect this ending 😂😂😂

SRI said...

Hope you liked it though 😀