மணியின் வாழ்க்கை
" ஹலோ மணி, உன்னால் கொஞ்சம் வர முடியுமா?" என்று வந்த அந்த தொலைபேசி அழைப்பு மணியை ரொம்பவே பாதித்து இருந்தது. அழகான கொண்டாட்டத்தை முடித்து விட்டு அந்த அற்புதமான இரவை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த போது அந்த தொலைபேசி அழைப்பை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை தான்.
அற்புதமான இரவு எவ்வளவு மாறிப்போய் இருந்தது.. " உடனே வரேன்... அது வரை காத்திருங்க" என்று கூறி கொண்டே அவனுடைய அழகான வீட்டில் நுழைந்து,மின்சார பொத்தானை அழுத்த வீடு உயிர் பெற்று எழுந்தது..படுக்கை அறைக்கு செல்ல மின் தூக்கியில் கால் வைக்கும் போதே அவனது விழிகளில் சிறுதுளி ஈரம் எட்டி பார்த்து இருந்தது.. அழகான மனைவி அன்புக்குழந்தை இருவரும் அணைத்துக்கொண்டு அந்த குளிருக்கு இதமாக உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை தொந்தரவு செய்யாமல் மடிக்கணினியை இயக்கி செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான் மணி..
என்ன அற்புதமான வாழ்க்கை, ஒரு பொழுதில் இப்போது இரண்டு லட்சங்களை அனாயசமாக செலவு செய்து அவனால் பயண சீட்டு எடுக்க முடிந்திருந்தது. கடைசி பத்து வருட வாழ்க்கை அவனுடைய.அந்தஸ்தை பெரிதும் உயர்த்தி இருந்தது. இந்த செலவெல்லாம் ஒரு பொருட்டா என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான் அவனுக்கு அந்த ஞாபகம் எட்டி பார்த்தது..வாரத்திற்கு இரு முறையாவது கட்டாயமாக ஒரு ஐந்து நிமிட தொலைபேசி உரையாடல் வீட்டில் பேசாவிட்டால் அவனுக்கு நிம்மதியே இருக்காது. அன்று காலையில் தான் பேசியிருந்தான் அவனுடைய பெற்றோர்க்கு.. தந்தை மறுமுனையில் " என்னப்பா எப்படி இருக்க" என்று கேட்க ஆரம்பிக்க 5 நிமிடம் மட்டுமே இருக்க, சீக்கிரம் பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் மணிக்கு .. "சீக்கிரம்பா, அம்மாகிட்ட கொடு .. நான் எல்லாம் நல்லா தான் இருக்கேன்" என்று சொல்ல அப்பாவோ " இல்ல மணி, நான் நேத்து டாக்டர் கிட்ட போயிட்டு வந்தேன்பா, டாக்டர் ஏதோ புதுசா மாத்திரை வந்திருக்குன்னு சொன்னார்.. ஆனா ஒவ்வொரு மாத்திரையும் 500 ரூபாயாம்பா, வாங்கிக்கட்டுமா" என கேட்டவரிடம், இதெல்லாம் சும்மா டாக்டர் சொல்றதுப்பா" " தேவையின்னா வாங்கிக்கோ, தேவையான்னு பார்த்துக்கோ" இன்னொரு டாக்டர் கிட்ட தேவையான்னு விசாரிச்சுட்டு பண்ணு" என்று சொல்லி நேரமாகிவிடவே, " அம்மாகிட்ட அப்புறோம பேசறேன்" என்று சொல்லி விட்டு மணி அழைப்பை துண்டித்து விட்டு தனது நீல நிற BMW 720 ஐ தொடக்கி நியுயார்க் நகர சாலையில் சொகுசாக இளையராஜா இசையுடன் விரைந்தது நினைவுக்கு வந்தது.
இப்பொழுது 2 லட்சம் ஒரு எண்ணம் இல்லாமல் ஒரு நொடியில் செலவு செய்து விட்டு , கீழ் இறங்கி வந்து தூங்கும் தன மனைவியை மெதுவாக எழுப்பி தொலைபேசி அழைப்பு விவரத்தை தகவல் சொல்லிவிட்டு தன சென்று 5 நாட்களில் திரும்புவதாக கூறிவிட்டு, தானும் வருவதாக எத்தனித்த மனைவியிடம் குழந்தையிடம் பள்ளிக்கூடம் பற்றி கூறி இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய படகுக்காரில் பயணம் செய்ய வெளியே வர முகத்தில் பனி அறைந்தது .
பனி அறைய, காரை தொடக்க, இளையராஜா நித்திரையில் இருந்து எழ, பாதையில் விரைந்த போது, ஏனோ எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளி, கண்ணில் இருந்து கன்னத்தில் முத்தமிட்டுகொண்டு இருந்தது.
விமான நிலையம் நுழைந்த பின், அந்த அழகு தேவதை மணிக்கு பயணச்சீட்டை நீட்ட, எதையும் சட்டை செய்யாமல் விமானத்திற்கு உள்ளே சென்று அமர விமானி" இன்னும் 19 மணி நேரத்தில் நாம் சென்னையை அடைவோம்" என்று கூறும் பொழுதே அந்த தொலைபேசி அழைப்பு வந்து 5 மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தாகம் தணிக்க, 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பாடு என கவனித்துக்கொண்ட அந்த விமான பணிப்பெண் ஏனோ அவனுக்கு தன் அம்மாவை நினைவு படுத்த ...இவ்வளவு நேரம், கன்னத்தில் முத்தமிட்ட அந்த கண்ணீர் ... மல்க வழிந்து, அடக்க தெரியாத அழுகையாக மாறிவிட்டிருந்தது..
19 மணி நேரம் 19 யுகங்களாக கடந்து பரிதவித்து...சென்னையை விமானம் தொட, ஏனோ அன்னையை தொட்ட ஸ்பரிசம் கிடைக்க, அழுகை மேலோங்க, தன பணத்தையும் கவுரத்தையும் மறந்து, அழுது ஓட, எல்லோரும் வேறு விதமாக அவனைப்பார்க்கவும், கண்டு கொள்ளாமல் அவன் ஓடுவது அவனுக்கு புதுமையாகத்தான் இருந்தது.
வெளியே வர, தன் மாமா தன்னை அழைக்க வந்திருப்பதை பார்த்தும் தான் தெரிந்தது ,. அவன் சென்னை வந்து 5 வருட காலம் ஓடி விட்டது என்று ..எதுவும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொள்ள.. மாமாவின் தோளில் சாய்ந்ததும், காய்ந்த அந்த கண்ணீர் மீண்டும் ஒரு முறை எட்டி பார்க்க. தான் எதிர் கொள்ள போவதை எப்படி கடக்க போகிறோம் என்ற துக்கம்மும்,பயமும்,பாவ உணர்ச்சியும் மேலோங்க, கண்களை இறுக மூடிக்கொண்டான்.
தன் வீட்டில் இறங்கியதும், உள்ளே ஓடி வீட்டின் கூடத்தில், வாய் கட்டி விரல் கட்டி புன்னகையுடன் தரையில் கிடத்தப்பட்டிருந்த அம்மாவிடம் அவன் 2 நிமிடம் பேச முடியுமானால் ....
மணி மட்டுமல்ல, நாங்கள் எல்லாரும் வெளிநாட்டில் பெற்றது அதிகமே !!
10 comments:
இந்த கதை என் உணர்வுகளை வெளிபடுத்துகிறது.
இந்த உணர்வுதான் என்னை சரியான நேரத்தில்
என் பெற்றோரிடம் மீண்டும் கொண்டுவந்து சேர்த்தது.
மிக அழகான, ஆழமான பதிவு.
இந்த பதிவின் மூலம், பெற்றோரின் கடைசிகாலத்தில்
அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தை
பெறப்போகும் உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்
மிக அழகான, ஆழமான பதிவு. Try to publish in a weekly
அற்புதம். நிறைய எழுதுங்கோ.
Thank you so much. I dont have any contacts to publish it in a weekly..... Will try...
Thank you senthil..am happy that it touched your heart....
Thank you senthil..am happy that it touched your heart....
Sure will try manni
இந்த கதை என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும் அதோட எழுத்து வடிவம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சார். இன்னும் நிறைய எழுதவும்.
Thank you so much. It is absolutely my pleasure that you liked it
Post a Comment